பாகிஸ்தானில் ரம்ஜான் திருநாட்களை முன்னிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
கிறிஸ்துவ குழுக்கள் உதவி
செப்.13, 2010. பாகிஸ்தானில் ரம்ஜான் திருநாட்களை முன்னிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு கிறிஸ்துவ குழுக்கள் உணவும், உடைகளும் வழங்கி உள்ளன.
தேவையில் உள்ளவர்களுடன்
பகிர்வது கிறிஸ்தவ பண்பு என்பதை வலியுறுத்தவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று
லாகூர் காரித்தாஸ் அமைப்பின் செயலர் அருள்தந்தை ஜோசப் லூயிஸ் கூறினார்.