2010-09-13 16:27:46

பாகிஸ்தானில் ரம்ஜான் திருநாட்களை முன்னிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்துவ குழுக்கள் உதவி


செப்.13, 2010. பாகிஸ்தானில் ரம்ஜான் திருநாட்களை முன்னிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்துவ குழுக்கள் உணவும், உடைகளும் வழங்கி உள்ளன.

தேவையில் உள்ளவர்களுடன் பகிர்வது கிறிஸ்தவ பண்பு என்பதை வலியுறுத்தவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று லாகூர் காரித்தாஸ் அமைப்பின் செயலர் அருள்தந்தை ஜோசப் லூயிஸ் கூறினார்.

அண்மையில் கொண்டாடப்பட்ட முஸ்லிம்களின் திருநாட்களான ரம்ஜானை முன்னிட்டு, 64 குடும்பங்களுக்கு உணவும் உடைகளும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் தன் குழந்தைகள் புத்தாடை அணிவதற்கு உதவிய காரித்தாஸ் அமைப்பிற்குத் தன் நன்றியைத் தெரிவித்தார் Latif Gareeban என்ற குடும்பத் தலைவி.

Multan ஆயர் Andrew Francis கன்னியர்கள், குருக்கள் உதவியுடன் 200 குடும்பங்களுக்கு உணவும் உடைகளும் வழங்கினார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.