உள்ளே இருக்க வேண்டியவர்கள் வெளியே இருக்கிறார்கள். வெளியே இருக்க வேண்டியவர்கள் உள்ளே
இருக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்களும் இல்லை. உள்ளே இருப்பவர்கள்
எல்லாம் அயோக்கியர்களும் அல்ல என்று சிறைகளில் கம்பி எண்ணுபவர்கள் பற்றிச் சொல்வார்கள்.
அதேபோல் இவ்வுலகில் துன்பம் எனும் சுமையால் அழுத்தப்பட்டுக் கொண்டிருப்போர் எல்லாரும்
தீயவர்கள் அல்ல. செல்வத்தில் செழிப்பவர்கள் எல்லாரும் நீதிமான்களும் அல்ல. பளுவானவைகளைச்
சுமப்பவர்கள் எல்லாம் பாவிகளும் அல்ல, பழி சுமத்துவோரெல்லாம் நீதிமான்களும் அல்ல. நீண்ட
தூரம் செல்லும் பயணிக்கு சுமையை இறக்கி வைத்து இளைப்பாற உதவும் சுமை தாங்கிகள் எல்லாம்
அந்தச் சுமைகளுக்குச் சொந்தங்களும் அல்ல. இதைத்தான் இயேசுவின் திருச்சிலுவை உணர்த்துகிறது.