ஆப்ரிக்க வளர்ச்சித் திட்டங்களுக்கென 10 கோடி டாலர்களை வழங்க முன்வந்துள்ளன அபுதாபி மற்றும்
ஜப்பானின் இரு நிதி நிறுவனங்கள்
செப்.13, 2010. அபுதாபி மற்றும் ஜப்பானின் இரு நிதி நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஆப்ரிக்க
வளர்ச்சித் திட்டங்களுக்கென 10 கோடி டாலர்களை வழங்க முன்வந்துள்ளன.
வங்கி, சுரங்கத்தொழில்,
பயன்பாட்டுப்பொருள் உற்பத்தி ஆகிய துறைகள் வழி மக்கள் முன்னேற்றத்திட்டங்களுக்கென நைஜீரியா,
கானா, எகிப்து, துனிசியா, மொரோக்கோ ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும்
ஆண்டின் துவக்கத்தில் இம்முதலீடுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கக்
கண்டத்தில் தற்போது ஒரு நிலையானச் சூழல் உருவாகியுள்ளதாகவும் இதனால் அக்கண்டத்தின் உற்பத்திப்பொருட்கள்
அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அபுதாபி மற்றும் ஜப்பானிலிருந்து உதவி வழங்கும்
இவ்விரு உதவி நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.