2010-09-11 16:25:16

பிற மதத்தவரைப் புண்படுத்தும் மதத் தீவிரவாதிகளைத் தனிமைப்படுத்த போபால் பேராயர் அழைப்பு


செப்.11,2010. மற்ற மதத்தவரைப் புண்படுத்தும் மதத் தீவிரவாதிகளைக் கிறிஸ்தவரும் முஸ்லீம்களும் தனிமைப்படுத்துமாறு இந்தியப் பேராயர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஃபுளோரிடாப் பாதிரியார் டெரி ஜோன்ஸ் விடுத்த குரான் எரிப்பு அச்சுறுத்தல் நம் முஸ்லீம் நண்பர்கள் மத்தியில் எவ்வளவு எதிர்ப்புச் செயல்களை உருவாக்கியுள்ளது என்றுரைத்த போபால் பேராயர் லியோ கொர்னேலியோ, முஸ்லீம்கள் தற்சமயம் புண்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றார்.

அதேசமயம், அவர்கள் மதத்தில் சில தீவிரப்பற்றாளர்கள் இதே மாதிரியான செயல்களைப் பிற மதத்தவர்க்குச் செய்யும் போது, அம்மதத்தவரின் மத உணர்வுகள் புண்படுத்தப்படுவதை நமது முஸ்லீம் நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் பேராயர் கொர்னேலியோ கேட்டுக்கொண்டார்.

மதத்தை மதிப்பது என்பது மனிதரை மதிப்பதாகும் என்றும் பேராயர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.