2010-09-11 16:26:08

தாயின் வயிறு குழந்தைக்கு மிகவும் ஆபத்தான இடம் - ஸ்பானிய ஆயர்


செப்.11,2010. உலகில் அதிகரித்து வரும் கருக்கலைப்புகள், தாயின் வயிற்றை குழந்தை வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக மாற்றி வருகின்றன என்று ஸ்பானிய ஆயர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பெண்கள் தங்கள் கர்ப்பத்தைக் காப்பதற்கு எதுவும் உதவிகள் செய்யப்படாமல், அதேவேளை அவற்றைக் கலைப்பதற்கான முறைகள் எளிதாக்கப்பட்டு இருப்பது குறித்து கவலை தெரிவித்தார் ஆயர் Demetrio Fernandez.

Fuensanta அன்னைமரியா விழாவைச் சிறப்பித்தத் திருப்பலியில் இவ்வாறு உரைத்த ஆயர் Fernandez, பெண்கள் தன்னல சமுதாயத்தின் பலிகளாக மீண்டும் மாறி வருகிறார்கள் என்றும் கருக்கலைப்பு செய்யும் பெண்களில் பலர் தங்கள் வாழ்நாளெல்லாம் இச்செயலுக்காக வருந்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.