2010-09-10 16:00:27

உலகில் அமைதியைக் கட்டி எழுப்புவதில் பெண்களுக்கு தவிர்க்க முடியாத பங்கு உள்ளது - பான் கி மூன்


செப்.10,2010. உலகில் அமைதியைக் கட்டி எழுப்புவதில் பெண்களுக்கு இருக்கும் தவிர்க்க முடியாத பங்கைச் சுட்டிக் காட்டியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

ஒப்புரவு, அமைதி, பொருளாதார மேம்பாடு தொடங்கி, சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துவது வரை எல்லாவற்றிலும் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று பெல்ஜியத்தில் நடைபெற்ற பெண்கள் கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பியுள்ளார் மூன்.

அண்மையில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம் பெற்ற பாலியல் வன்செயல்கள், சர்வதேச சமுதாயம் பெண்களைப் பாதுகாப்பதற்கு இன்னும் தவறியே வருகின்றது என்பதையே காட்டுகின்றது என்றும் அவரின் செய்தி கூறுகின்றது








All the contents on this site are copyrighted ©.