2010-09-08 15:58:26

அன்னை தெரேசாவுக்கு உலகின் பல்வேறு இடங்களிலும் மரியாதை


செப்.08, 2010 முத்திபேறு பெற்ற அன்னை தெரேசாவின் 100வது பிறந்த நாளையும், அவர் மறைந்த 13வது ஆண்டையும் ஓட்டி, இந்தியாவிலும், உலகில் பல்வேறு இடங்களிலும் பல வழிகளில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 23ம் தேதி ஆரம்பமான இந்த நிகழ்வுகள் அன்னை தெரேசா மறைந்த செப்டம்பர் 5ம் தேதி வரை நடந்தேறின.
இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் அன்னையின் நினைவாக நாணயங்களும், தபால் தலைகளும் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் வாஷிங்கடனில் உள்ள மாசில்லா அன்னையின் ஆலயத்தில் இஞ்ஞாயிறு அன்னை தெரேசாவின் தபால் தலை வெளியிடப்பட்டது.அல்பேனிய இனத்தவரெனக் கருத்தப்படும் அன்னை தெரேசாவின் பெயர் கொண்ட ஒரு பேராலயம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள Kosovoவின் தலை நகரில் இஞ்ஞாயிறன்று அர்ப்பணிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.