மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுமாறு ஐ.நா. அழைப்பு
செப்.04,2010. உலகிலுள்ள சுமார் 65 கோடி மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு
உறுதிப்படுத்தப்படுமாறு ஐ.நா.கருத்தரங்கில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐ.நா.தலைமையகமான
நியுயார்க்கில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த மூன்று நாள் கருத்தரங்கில் நூற்றுக்கணக்கானப்
பிரதிநிதிகள் கலந்து கொண்டு இவ்வழைப்பை முன்வைத்தனர்.
2008ம் ஆண்டில் அமலுக்கு
வந்த மாற்றுத்திறனாளிகள் குறித்த உலக ஒப்பந்தம் நடைமுறைபடுத்தப்படும் விதம் குறித்துப்
பரிசீலனை செய்வதற்காக இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இவ்வொப்பந்தத்தில் 146 நாடுகள்
கையெழுத்திட்டுள்ளன மற்றும் இதனை 90 நாடுகள் நடைமுறைபடுத்தியுள்ளன.