2010-09-02 15:33:33

செப்டம்பர் 03 நாளும் ஒரு நல்லெண்ணம்


செல்வமணி என்ற பெண்ணுக்கு ஒன்பது ஆண்டுகளாக நடக்க முடியாத அளவுக்குக் கால் முழுவதும் புண்கள். பெரிய பெரிய மருத்துவமனை, சிறந்த கைராசி மருத்துவர்கள். இவர்கள் எவராலும் அந்தப் புண்களைக் குணப்படுத்த முடியவில்லை. ஒருநாள் ஒரு நண்பர் அப்பெண்ணிடம், ஆரோக்யத் தாயிடம் செபம் செய். அந்தத் தாயின் அற்புத மண்ணுக்கு நடந்து போ என்று பரிந்துரைத்தார். செல்வமணியும் அன்னையிடம் வேண்டிக் கொண்டே வேதனையோடு நடந்து அந்த ஆரோக்யத் தாயின் ஆலயத்தை அடைந்தார். அப்போது அவரது கால் பயங்கரமாக வலித்தது. எனினும் நம்பிக்கை இழக்காமல் கண்ணீரோடு மன்றாடினார். செபிப்பது எப்படி என்று தெரியாத கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்திராத அந்தப் பெண் அன்னையின் எண்ணெய்யையும் புனித நீரையும் எடுத்துக் கால் புண்களில் தடவினார். ஒன்பது ஆண்டுகளாகக் குணமாகாமல் இருந்த கால் புண்கள் மூன்றே நாட்களில் குணமடைந்தன.

அதிசயம், அற்புதம். நம்பினோர் கெடுவதில்லை. இறைவனின் தாய் ஆரோக்ய தாய். இவர் தன்னை நம்பி வரும் பிள்ளைகளை ஒருபொழுதும் கைவிடுவதே இல்லை








All the contents on this site are copyrighted ©.