தென் சூடானில் பாலர் படைவீரர் பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கு தீர்மானம்
ஆக.31,2010. தென் சூடானில் பாலர் படைவீரர் பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென்
சூடானுக்குச் சுதந்திரம் வழங்குவது குறித்த பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு வருகிற
ஜனவரியில் நடைபெறவுள்ளது. அதையொட்டி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்குக்கு
எதிராக நீண்ட காலமாகப் போரிட்டு வந்த தென்சூடான் SPLA என்ற சூடான் மக்கள் விடுதலைப்படை
ஏற்கனவே இருபதாயிரத்துக்கு மேற்பட்ட பாலர் படைவீரர்களை வெளியேற்றியுள்ளதாக நம்பப்படுகிறது.
இன்னும் சுமார் 900 பாலர் படைவீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது