2010-08-28 15:47:10

ஹைதராபாத் பேராயர் மாரம்புடி ஜோஜி மரணம்


ஆக.28,2010. இந்தியாவின் ஹைதராபாத் பேராயர் மாரம்புடி ஜோஜி இவ்வெள்ளி மாலை இறைபதம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.

ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் பேராயர் இல்லத்தில் இவ்வெள்ளி மதிய உணவுக்குப் பின்னர் ஓய்வெடுக்கச் சென்ற பேராயர் ஜோஜி அவரது படுக்கையறையில் இறந்து கிடந்தார் என்று ஹைதராபாத் உயர்மறைமாவட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

68 வயதாகும் பேராயர் ஜோஜியின் உடல், பொது மக்களின் பார்வைக்காக செக்கண்தெரபாத் புனித மரியா ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் இறுதி அடக்கச் சடங்கு இத்திங்கள் மாலை 3 மணிக்கு விஜயவாடா பேராலயத்தில் நடைபெறும்.

1942ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பீமவரம் என்ற ஊரில் பிறந்த பேராயர் ஜோஜி, 1971ம் ஆண்டு குருவானார். விஜயவாடா மறைமாவட்டத்தில் முதன்முதலாகச் சேர்ந்த உள்ளூர் தெலுங்கு அருட்பணியாளர்களுள் இந்தப் பேராயரும் ஒருவர். 1992ல் கம்மம் ஆயராக நியமிக்கப்பட்ட இவர் 1996ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி விஜயவாடா மறைமாவட்ட ஆயராகவும் நியமிக்கப்பட்டார். இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் 17ம் தேதி ஹைதராபாத் பேராயராக நியமிக்கப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.