லீமாவில் பிரான்சிஸ்கன் சபைக் குரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
ஆக.28,2010. பெரு நாட்டு லீமாவில் பிரான்சிஸ்கன் சபைக் குரு ஒருவரும் அவரது உதவியாளர்
ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று வத்திக்கான் செய்தி நிறுவனமான Fides கூறியது.
தென்
அமெரிக்க நாடான பெரு தலைநகர் லீமா பிரான்சிஸ்கன் இல்லத்தில் இவ்வெள்ளி காலை 80 வயதாகும்
அருள்தந்தை Linan Ruiz Morales அவரது கழுத்தில் பலமுறை குத்தப்பட்டு இறந்து கிடந்தார்.
அக்குருவுக்கு
உதவியாக இருந்த 26 வயதாகும் Ananias Aguila என்பவரும் பல வெட்டுக் காயங்களுடன் இறந்து
கிடந்தார் என்று அச்செய்தி நிறுவனம் கூறியது.
Puerto Rica நாட்டைச் சேர்ந்த அருள்தந்தை
Ruiz தனது 27 வது வயதில் பெரு நாட்டில் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். இவர் மக்களால்
பெரிதும் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது