பெங்களூரு மற்றும் அசிசி நகரில் அன்னை தெரேசாவின் 100வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள்
ஆகஸ்ட் 26, 2010 இவ்விழாவையொட்டி, பெங்களூரு உயர்மறைமாவட்டம் இவ்வியாழனன்று மாலை திருப்பலியும்
பொதுக்கூட்டமும் நடத்தியுள்ளது. இந்நிகழ்ச்சிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய
பெங்களூரு பேராயர் Bernard Moras, அன்னை தெரேசாவின் கண்காட்சி ஒன்று இவ்வியாழன் முதல்
புனித பிரான்சிஸ் சேவியர் பேராலய வளாகத்தில் துவக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதேபோல்,
இத்தாலியில் உள்ள அசிசி நகரில் அன்னை தெரேசாவின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு கண்காட்சி
இவ்வியாழன் முதல் ஒரு வாரத்திற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக வேறொரு செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.PIME என்ற மறைப்பணி துறவற சபையினரால் நடத்தப்படும் 'Mondo e Missione' என்ற
மாத இதழின் ஒரு முயற்சியாக இந்தக் கண்காட்சி அமைகிறதென அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.