2010-08-26 16:09:22

அன்னை தெரேசாவின் அன்றாட செபம்


அன்பு இயேசுவே, நான் செல்லுமிடமெல்லாம் உமது மணத்தைப் பரப்ப உதவும். எனது ஆன்மாவை உமது ஆவியால் நிரப்பும். அதில் உமதன்பு ஊடுருவச் செய்யும். நீர் என்னை முழுமையாக ஆட்கொள்ளும். அதன்மூலம் எனது வாழ்வு முழுமையும் உமது சுடர் மட்டுமே ஒளிரும். நீர் என்னில் இருந்து என் வழியாக என்னில் ஒளிரும். அதன் மூலம் என்னைத் தொடர்பு கொள்பவர் எல்லாரும் என் ஆன்மாவில் உமது பிரசன்னத்தை உணருவார்கள். அவர்கள் என்னில் உம்மை மட்டுமே காண்பார்களாக. இயேசுவே, நீர் என்னோடு தங்கிச் சுடர்விடத் தொடங்கும் பொழுது நானும் சுடர்விடத் தொடங்குவேன். பிறருக்கும் ஒளியாகத் திகழ்வேன்







All the contents on this site are copyrighted ©.