அன்னை தெரசாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டங்களையொட்டி திருத்தந்தை அனுப்பியுள்ள
வாழ்த்துச் செய்தி
ஆகஸ்ட் 26, 2010 அன்னை தெரேசா எனும் உருவில் வழங்கப்பட்டக் கொடைக்கென இறைவனுக்கு மகிழ்ச்சியில்
நன்றி கூறும் காலக்கட்டமாக இது இருக்கட்டும் என அன்னை தெரேசாவின் 100வது பிறந்த நாள்
கொண்டாட்டங்களையொட்டி பிறரன்பு மறைபோதக சகோதரிகள் சபைக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்
குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஒருவர் மீது ஒருவர் அன்பு கூர்வதற்கான
இறைவனின் அழைப்பை ஏற்று அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த அன்னை தெரேசாவின் ஆன்மீக குழந்தைகளான
நீங்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களுக்குப் பணிபுரிவதன் மூலம், ஆன்மாக்கள் மீதான இயேசுவின்
தாகத்தைத் தணிக்க உதவுகின்றிர்கள் என அச்செய்தியில் பாராட்டியுள்ளார் பாப்பிறை. ஏழைகள்,
நோயாளிகள், தனிமையில் வாடுவோர் மற்றும் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கான பணிகளின் வழி இயேசுவிற்குத்
தங்களையே தாராள மனதுடன் கையளிக்கும் பிறரன்பு சபைச் சகோதரிகள், அன்னை தெரேசாவின் எடுத்துக்காட்டு
மற்றும் ஆன்மீகத்திலிருந்து பலம் பெற்று, தங்கள் பிறரன்புப் பணிகளைத் தொடர்வார்களாக எனத்
திருத்தந்தை தன் வாழ்த்துச்செய்தியில் மேலும் கூறியுள்ளார்.