‘கண்ணுடையோர்
என்போர் கற்றோர்’ என வள்ளுவரும், ஆசிரியரை கண் தந்தவராய் காட்டுகிறார். அவர்கள் தான்
முரண்பாடுகளின் மோகம் அகற்றி பண்பாடு வளர்த்தவர்கள். கல்வி என்பது நாட்டை ஆள அல்ல, வாழும்
நாட்களை ஆள எனக் கற்றுத் தந்தவர்கள்.
வார்த்தைகளில் வாய்மையைப் பாடமாக்கி, வழி மாறாமல் இருக்க
ஒளியூட்டி, சிந்தனைச் சிறகில் திசை மாட்டி, நமக்குரிய இடம் சேர்க்கும் தியாகச்செம்மல்கள்
ஆசிரியர்கள்.