2010-08-24 16:43:43

பிலிப்பீன்ஸில் அன்னை மரி மீதான பக்தியினைச் சிறப்பிக்கும் விதமாக சிறப்புத் தபால்தலை வெளியிடப்பட உள்ளது.


ஆகஸ்ட் 24, 2010. பிலிப்பீன்ஸின் பிகோல் பகுதியில் பெனாஃப்ரான்ச்யா அன்னை மரி மீதான பக்தியின் 300வது ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி சிறப்பு தபால்தலை ஒன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது அந்நாட்டின் கார்ச்செரஸ் பெருமறைமாவட்டம்.

அன்னை மரி மீதான பக்தியினைச் சிறப்பிக்கும் விதமாக செப்டம்பர் 11ந்தேதி அன்னைமரி சிறப்புத் தபால் தலையை பிலிப்பீன்ஸ் தபால் துறை வெளியிட உள்ளதன் வழி உலகம் முழுவதும் மரியன்னை பக்தி வளர இது ஒரு சிறு வழியாக இருக்கும் என்றார் விழா ஏற்பாடுகளைக் கவனிக்கும் குரு வில்மர் ட்ரியா.








All the contents on this site are copyrighted ©.