இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி: இந்திய உதவி ஓராண்டு நீட்டிப்பு
ஆக.21,2010. இலங்கையில் கண்ணிவெடியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின்
ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு பகுதியில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக
7 இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன. அவற்றின் ஒப்பந்தத்தை மேலும்
ஓராண்டு நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
போரால் இடம்பெயர்ந்தவர்களை
மறுகுடியமர்த்தும் பணியையும், வடக்குப் பகுதியில் இரயில் இருப்புப்பாதை அமைக்கும் பகுதியில்
கண்ணிவெடி அகற்றும் பணியிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபடும்.
மேலும், இலங்கையின்
யாழ்ப்பாணம், அம்பனத்தோட்டம் ஆகிய நகரங்களில் மேலும் இரு இந்திய துணைத் தூதரகங்கள் அமையவுள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.