2010-08-20 15:45:16

அன்னை தெரேசா பற்றிய ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு பிபிசி அனுமதி


ஆக.20,2010. இந்தியாவில் இடம் பெறவிருக்கும் முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா பற்றிய திரைப்பட விழாவில் 1969ம் ஆண்டில் பிபிசி தயாரித்த ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரேசா பற்றித் தயாரிக்கப்பட்ட Something Beautiful for God என்ற முதல் ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு கேட்கப்பட்ட அனுமதிக்கு பிபிசி மௌனம் காத்து வந்ததாகவும் தற்சமயம் அதற்கு அது அனுமதி அளித்திருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

இம்மாதம் 26 முதல் 29 வரை கொல்கத்தாவில் அன்னை தெரேசா பற்றிய திரைப்பட விழாவை நடத்தும் இயக்குனர் சுனில் லூக்காசுக்கு பிபிசி பொது இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுமதி தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகச் செயதிகள் கூறுகின்றன.

1969ம் ஆண்டில் பிபிசி படத் தயாரிப்புக்குழு கொல்கத்தாவில் அன்னை தெரேசாவுடன் ஐந்து நாட்கள் தங்கி இந்த 58 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்தது. அன்னை தெரேசா சர்வதேச அளவில் தெரிந்து கொள்ளப்பட இப்படம் காரணமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.