ஆக.14,2010. Gabon நாடு சுதந்திரம் அடைந்ததன் ஐம்பதாம் ஆண்டை அந்நாட்டுக் கத்தோலிக்கத்
திருச்சபை அன்னைமரியாவின் விண்ணேற்பு விழாவான இஞ்ஞாயிறன்று வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றது.
ஆப்ரிக்க
நாடான காபோன் விடுதலை அடைந்ததன் பொன்விழாவைக் கொண்டாடும் தலத்திருச்சபை, “கடந்த 50 ஆண்டுகளில்
திருச்சபை நாட்டிற்கு ஆற்றிய தொண்டுகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றையும் நடத்தியுள்ளது.
காபோன்
நாட்டில் கத்தோலிக்க மறைப்பணியானது தலைநகர் Libreville ல் 1844ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மேற்கு மத்திய ஆப்ரிக்க நாடான காபோன், 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி பிரான்ஸிடமிருந்து
சுதந்திரம் பெற்றது. அந்நாட்டின் பொன்விழா நிகழ்வுகள் கடந்த ஜூலை 23ம் தேதியிலிருந்து
இடம் பெற்று வருகின்றன.