மலையில் பிறந்து, பனியாயும் உறைந்து, நதியில் ஓடி கடலில் சங்கமித்து, வெப்பத்தின் விருந்தாளியாகி,
வானில் மேகமாய் மிதந்து, மீண்டும் பிறந்த வீட்டுக்கே விருந்துக்கு வரும் தண்ணீரைத் திரவம்
என்பதா, ஆவி என்பதா அல்லது திடப்பொருள் என்பதா?
வாய்க்கால், குளம், குட்டை, நதி,
கடல் என்று தண்ணீருக்கத்தான் எத்தனை முகங்கள்!
வளர்ச்சி என்றொரு வணிகப் பெயரில் வளங்களைப் பறிகொடுத்தல்
தொடர்கதையாகிறது. இருளே வழியாகிறது துயரே துணையாகிறது. ஆழம் தெரியாமல் காலை விட்டு அகப்பட்டு
முழிக்கிறோம்.
நீர் இனிது; நிலம் இனிது……..மழை இனிது;....... கடல் இனிது; ........
மகாகவி
இவையெல்லாம் இனிது என்றாரா அல்லது இவையெல்லாம் இனி ஏது என்றாரா?
"வீணாகும் ஆற்றுநீர்
இணைப்பு எனும் நினைப்பெல்லாம் வீண் தானா?
வெறும் கானல்நீர் தானா?' யார் மனசாட்சிக்கான
கேள்விகள் இவை?.