2010-08-11 15:53:21

பாலிவுட் நடிகை பிரியாங்கா சோப்ரா UNICEF நிறுவனத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டார்


ஆகஸ்ட் 11, 2010 சில ஆண்டுகளுக்கு முன்னால் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், தற்போதைய பாலிவுட் நடிகையுமான பிரியாங்கா சோப்ரா UNICEF நிறுவனத்தின் தூதுவராக இச்செவ்வாயன்று நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம் குறித்து, புது டில்லியில் இச்செவ்வாயன்று நிகழ்ந்த ஒரு விழாவின் போது பேசுகையில், இந்த நியமனம் தனக்குக் கிடைத்த ஓர் உயரிய கெளரவம் என்றும், குழந்தைகளின் உரிமைகளுக்காக உழைக்க தனக்குக் கிடைத்த ஒர் அரிய வாய்ப்பு இது என்றும் நடிகை பிரியாங்கா கூறினார்.

உலகெங்கும், சிறப்பாக, இந்தியாவில் குழந்தைகள் நலனுக்கென UNICEF தூதுவர்களாக ஏற்கனவே நியமனம் பெற்றுள்ள அமிதாப் பச்சன், ஷர்மிளா தாகூர் ஆகிய நடிகர்களோடு, இப்போது பிரியாங்கா சோப்ராவும் ஒரு தூதுவராக நியமனம் பெற்றுள்ளார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.