2010-08-10 16:46:19

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 30 ஆயிரம் டாலர்களை கொடுத்து உதவ முன் வந்துள்ளது கொரிய காரித்தாஸ் அமைப்பு.


ஆகஸ்ட்  10, 2010.      பாகிஸ்தானில் பெருமழையாலும் வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் அவசரகாலப் பணிகளுக்கென 30 ஆயிரம் டாலர்களை பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் மூலம் கொடுத்து உதவ முன் வந்துள்ளது கொரிய காரித்தாஸ் அமைப்பு.

நில அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி நாட்டிற்கு 4 இலட்சம் டாலர்களையும், சிலே நாட்டிற்கு 50 ஆயிரம் டாலர்களையும் அண்மையிலேயே வழங்கியுள்ளதால் தற்போது 30 ஆயிரம் டாலர்களையே உடனடியாக வழங்க முடிந்துள்ளதாக அறிவிக்கும் கொரிய காரித்தாஸ் அமைப்பு, அடுத்த மாதத்தில் மேலும் ஒரு பெரிய தொகையை அந்நாட்டின் நிவாரணப் பணிகளுக்கென வழங்குவது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றது.

ஐநாவின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் அண்மை வெள்ளப்பெருக்கால் குறைந்த பட்சம் 1600 பேர் உயிரிழந்துள்ளனர், 1கோடியே 38 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.