செங்கை ஆயர் நீதிநாதனுக்கு கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது சென்னை லூத்தரன் இறையியல்
கல்லூரி.
ஆகஸ்ட் 10, 2010. செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதனுக்கு இறையியலில் கௌரவ முனைவர்
பட்டத்தை வழங்கியுள்ளது சென்னை லூத்தரன் இறையியல் கல்லூரி.
தலித் சமூகத்தினர்,
பெண்கள், மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கென உழைத்ததற்காகவும், அத்தகையோரிடையேயானப் பணிகளுக்கென
குருக்களுக்கும், பொதுநிலையினருக்கும் எடுத்ததுக்காட்டாகவும் தூண்டுதலாகவும் இருந்ததற்காகவும்
இக்கௌரவ விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது லூத்தரன் கிறிஸ்தவ சபையின் குருகுல் இறையியல்
கல்லூரி மற்றும் ஆய்வு மையம்.