மடு மாதா திருவிழாவில் இலங்கையின் அனைத்து ஆயர்களும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 09, 2010. இவ்வாண்டின் அன்னை விண்ணேற்புத் திருவிழாவையொட்டி இலங்கையின் மடு மாதாத்
திருத்தலத்தில் அந்நாட்டின் அனைத்து ஆயர்களும் கூடி திருவிழாவைச் சிறப்பிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'குடும்பம்'
என்ற தலைப்பில் வரும் சனியும் ஞாயிறும் சிறப்பிக்கப்படும் இத்திருவிழாக் கொண்டாட்டங்களில்
பெருமளவில் திருப்பயணிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக அறிவித்தார் மடுமாதா
திருத்தல நிர்வாகி குரு டெஸ்மண்ட் குலாஸ்.
பெருமளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்
அதற்கானòd சிறப்பு ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக அறிவித்தார் அவர்.
இதற்கிடையே,
மடுமாதா திருவிழாக் கொண்டாட்டங்களையொட்டி சிறப்பு இரயில்களை விட உள்ளதாக இலங்கை அரசு
அறிவித்துள்ளது.