2010-08-06 16:12:32

முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா புதிய தலைமுறைக்கு கடவுளின் அன்புக்குச் சாட்சியாகத் திகழ்பவர் - பேராயர் மச்சாடோ


ஆக.06,2010. முத்திப்பேறு பெற்ற கல்கத்தா அன்னை தெரேசா புதிய தலைமுறைக்கு கடவுளின் அன்புக்குச் சாட்சியாகத் திகழ்கின்றார் என்று வசை பேராயர் ஃபெலிக்ஸ் மச்சாடோ கூறினார்.

அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டைச் சிறப்பிப்பதற்கு உலகெங்கும் தயாரிப்புகள் இடம் பெற்று வருவதை முன்னிட்டு ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பேராயர் மச்சாடோ, அன்னை தெரேசாவின் வாழ்க்கையும் போதனைகளும் பலரின் வாழ்க்கையில், குறிப்பாக இளையோர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து விளக்கினார்.

அன்னை தெரேசா சர்வதேச அளவில் எல்லாராலும் அன்பு செய்யப்படும் புகழ்பெற்ற ஒரு மனிதர் என்றுரைத்த அவர், இத்தூயவரின் வாழ்வும் போதனைகளும் தொடர்ந்து காக்கப்படுமாறு கேட்டுக் கொண்டார்.

அன்னை தெரேசா பிறந்ததன் நூறாம் ஆண்டு இம்மாதம் 26ம் தேதி உலகெங்கும் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.