2010-08-06 16:15:07

கொழும்புப் பேராயர் – புதிய திருநற்கருணை ஆண்டில் போரினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிறப்புக் கவனம் காட்டப்படும்


ஆக.06,2010. இலங்கையின் கொழும்பு உயர்மறைமாவட்டத்தில் இம்மாதத்தில் தொடங்கப்படவிருக்கும் திருநற்கருணை ஆண்டில் போரினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று கொழும்புப் பேராயர் மால்கம் இரஞ்சித் கூறினார்.

இது குறித்து மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள கொழும்புப் பேராயர் இரஞ்சித், கொழும்பு உயர்மறைமாவட்டத்தில் இம்மாதம் 29ம் தேதி தொடங்கும் திருநற்கருணை ஆண்டு, 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியன்று நிறைவடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் விசுவாசிகள் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியிலுள்ள பங்குகளைப் பார்வையிட்டு ஆலயங்களைச் சீரமைக்கவும் அங்கு வாழ்ந்த சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் உதவுமாறு கேட்டுள்ளார் பேராயர் இரஞ்சித்.







All the contents on this site are copyrighted ©.