மும்பை அருகே கத்தோலிக்க ஜெபக்கூடம் தாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 02, 2010. மும்பையின் அருகேயுள்ள ஓர்லெம் எனுமிடத்தில் இடம்பெற்ற கத்தோலிக்க
ஜெபக்கூட்டத்தில் சிறு கும்பல் ஒன்று புகுந்துத் தாக்கியதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓர்லெம் எம்மானுவேல் கோவிலில் ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது
போதையுடன் புகுந்த எட்டு பேர் கொண்ட குழு ஒன்று முதலில் பெண்களிடம் அத்துமீறி நடக்க முயற்சித்து
பின்னர் அங்கு கூடியிருந்தோரைத் தாக்கியதில் பொன்குமார் என்பவர் காயமடைந்தார்.
காவல்துறை
இருவரை கைதுசெய்துள்ள நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மாநில சிறுபான்மை
ஆணையத்தின் துணைத்தலைவர் ஆபிரகாம் மத்தாய், எவ்விதப் பாகுபாடுமின்றி நியாயமான விசாரணைகளைக்
காவல்துறை முடுக்கிவிடவேண்டும் என்றார்.