இளைஞர்களுக்கான கருத்தரங்கு ஒன்றை நடத்தி வருகிறது அங்கோலா திருச்சபை.
ஆகஸ்ட் 02, 2010. “இளைஞர்களில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்” என்ற தலைப்பில் இத்திங்கள்
முதல் வெள்ளி வரை இளைஞர்களுக்கானக் கருத்தரங்கு ஒன்றை நடத்தி வருகிறது அங்கோலா திருச்சபை.
அங்கோலா
ஆயர் பேரவையின் கத்தோலிக்க இளைஞர்களுக்கான அவையால் அந்நாட்டின் லுவாண்டாவில் ஏற்பாடுச்
செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்த்தில் பங்கு பெறும் ஏறத்தாழ 150 இளையோர் பிரதிநிதிகளும் இளைஞர்களின்
பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கானத் தீர்மானங்களை எடுக்க உள்ளதுடன், இளைஞர்களைப் பாதிக்கும்
பிரச்னைகளான எயிட்ஸ், தொழிலாளர்களின் உரிமைகள், கல்வி, கற்பித்தல், சுற்றுச்சூழல் குறித்த
மனச்சான்று போன்றவை குறித்தும் விவாதித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.