ஆகஸ்ட் 02, 2010. அன்னை தெரசாவின் 100வது பிறந்த நாளையொட்டி அவரைப்பற்றிய திரைப்படம்
ஒன்று டெல்லியில் பேராயர் வின்சென்ட் கொன்செஸாவோவால் வெளியிடப்பட்டது.
கொல்கத்தாவைச்
சேர்ந்த சுனில் ஜிந்தா என்பவரால் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வழங்கும் செய்தியானது,
ஏழ்மை, பசி மற்றும் பகைமைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்துவதாக உள்ளது என்றார் டெல்லி பேராயர் .
28 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்கறுப்பு
வெள்ளை படத்தில் அன்னை தெரசா வாழ்ந்த காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் குறித்து நேரடியாக
எடுக்கப்பட்ட பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.