பாகிஸ்தானில் கடந்த 80 ஆண்டுகளில் தற்சமயம் அதிகமான மழை பெய்து வருகிறது
ஜூலை31,2010: பாகிஸ்தானில் கடந்த 80 ஆண்டுகளில் தற்சமயம் அதிகமான மழை பெய்து வருவதாகவும்
இதில் ஆறாயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானுக்கும்
ஆப்கானிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவினால் சுமார்
500 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் மட்டும் சுமார் அறுபது பேர் இறந்துள்ளனர்.
கடந்த
மூன்று நாட்களில் மட்டும் 300 மில்லிமீட்டருக்கு அதிகமான அளவில் மழை பெய்துள்ளது. இது
கடந்த 35 ஆண்டுகளில் பெய்த மழையின் அளவில் பெரியதாகும் என்று கூறப்படுகிறது.
குறைந்தது
அடுத்த பத்து நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.