2010-07-30 16:10:32

புனித டொன் போஸ்கோவின் திருப்பண்டம் வருகிற செப்டம்பர், அக்டோபரில் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடாவுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது


ஜூலை30,2010: நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் 16 மாதங்களுக்கு மேலாக எடுத்துச் செல்லப்பட்டு வந்த புனித டொன் போஸ்கோவின் திருப்பண்டம் அடங்கிய பேழை வருகிற செப்டம்பர், அக்டோபரில் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடாவுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது.

சலேசிய சபை தொடங்கப்பட்டதன் 150ம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புனித டொன் போஸ்கோவின் திருப்பண்டம் அடங்கிய பேழை, உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் திருப்பயணம் 2009ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் பயணமானது இப்புனிதர் பிறந்த 200ஆம் ஆண்டு நிறைவோடு இத்தாலியின் தூரினில் முடிவடையும்.

சலேசிய சபையைத் தொடங்கிய புனித டொன் போஸ்கோ, 1815ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்தார்.








All the contents on this site are copyrighted ©.