தன் கோடை விடுமுறை நாட்களை நல்ல ஓய்விலும் மகிழ்விலும் செலவழிக்கிறார் திருத்தந்தை
ஜூலை 29, 2010 Castel Gondolfoவில் தன் கோடை விடுமுறையைக் கழித்து வரும் திருத்தந்தை,
நல்ல ஓய்விலும் மகிழ்விலும் நாட்களைச் செலவழிக்கிறார் என்று அப்பகுதியின் ஆயர் Marcello
Semeraro கூறினார். திருத்தந்தையின் கோடை விடுமுறை குறித்து வத்திக்கான் வானொலிக்கு
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஆயர் Semeraro இவ்வாறு கூறினார். தன் கோடை விடுமுறை
இல்லத்திலிருந்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அளிக்கும் மூவேளை செப உரையைக் கேட்க மக்களும்,
திருப்பயணிகளும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருவதாகக் கூறினார் ஆயர் Semeraro.திருத்தந்தையைக்
காண வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாவதால், Castel Gondolfoவைச் சுற்றியுள்ள கோவில்களில்
ஞாயிறு திருப்பலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி
என்று ஆயர் Semeraro கூறினார்.