2010-07-28 17:02:37

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் போலீசுக்கு எதிராக போராட்டம்


ஜூலை 28, 2010 இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் ராகம்வெல கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பாரம்பரிய கிராமத்திலிருந்து தாம் விரட்டியடிக்கப்படுவதாகக் கூறி, இச்செவ்வாய்கிழமையன்று கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு அதிகாரி எடிசன் குணதிலக்க, கிராமவாசிகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 17ம் தேதியன்று நள்ளிரவு ராகம்வெல கிராமத்துக்குள் ஆயுதஙகளைத் தாங்கிய சிலர் புகுந்து, அங்கிருந்த பல வீடுகளையும் பயிர்களையும் தீயிட்டு எரித்துவிட்டு விவசாயிகளையும் தாக்கிவிட்டுச் சென்றுள்ளதாக கூறும் கிராமவாசிகள், காவல் துறையினர் தமது நிலங்களை அபகரிப்பதாக அம்பாறை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.