2010-07-27 14:42:04

உலகின் அனைத்து தாத்தா பாட்டிகளுக்கும் திருத்தந்தை நன்றி


ஜூலை27,2010: அன்னைமரியாவின் பெற்றோராகிய புனிதர்கள் சுவக்கீன் அன்னாள் விழாவன்று உலகின் அனைத்து தாத்தா பாட்டிகளுக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஸ்பெயின் நாட்டு ஹேனில் சிறப்பிக்கப்பட்ட இவ்விழாவுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, தாத்தா பாட்டிகளின் சமய, ஆன்மீக, மனித மற்றும் சமூக வளங்களைப் பாராட்டியுள்ளார்.

தாத்தா பாட்டிகள் தங்களது விசுவாச வாழ்வில் உறுதியாக இருந்து வாழ்க்கையின் எல்லா நேரங்களுக்கும் கிறிஸ்துவின் ஒளியில் அர்த்தம் கொடுத்து வாழுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை

மேலும், இவ்விழாத் திருப்பலியை உரோமையில் நிகழ்த்திய கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி குடும்பங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அன்னைமரியாவின் பெற்றோராகிய புனிதர்கள் சுவக்கீன் அன்னாள் விழா ஜூலை 26ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது








All the contents on this site are copyrighted ©.