இலங்கையின் உள்நாட்டுச் சண்டையில் ஆயிரக்கணக்கான சிறார் அநாதைகளாகியுள்ளனர்
ஜூலை27,2010: இலங்கையில் அரசுக்கும் தமிழ் விடுதலைப்புலிகளுக்குமிடையே இடம் பெற்ற சண்டையில்
எட்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறார் பெற்றோரின்றி அனாதைகளாக இருக்கின்றனர்.
ஒரு
பள்ளியில் மட்டுமே 200க்கும் மேற்பட்ட அநாதைச் சிறார் படிக்கின்றனர் என்றும் இவர்களுக்கு
உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
இந்த அநாதைச்
சிறாரைச் சந்தித்த இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கே, தாய்களை
இழந்த 102 சிறார், தந்தைகளை இழந்த 97 சிறார், இருவரையுமே இழந்த 15 சிறாரை ஒரு பள்ளியில்
சந்தித்ததாகத் தெரிவித்தார்