இரஷ்யாவுக்கான திருப்பீடத்தின் முதல் தூதர் நம்பிக்கைச் சான்றிதழைச் சமர்ப்பித்துள்ளார்.
ஜூலை27,2010: இரஷ்யக் கூட்டமைப்புக்கான திருப்பீடத்தின் முதல் தூதர் பேராயர் Antonio
Mennini, இரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergej Lavrov டம் நம்பிக்கைச் சான்றிதழைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்நிகழ்வில்
இரஷ்ய உதவி வெளியுறவு அமைச்சர் Alexandr Krusko, ஐரோப்பிய விவகாரங்களுக்கான இயக்குனர்,
திருப்பீடத்துக்கான இரஷ்ய கூட்டமைப்புத் தூதர் எனச் சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வரலாற்று
சிறப்புமிக்க இந்நிகழ்வைக் கோடிட்டுக் காட்டிப் பேசிய Krusko, அண்மை ஆண்டுகளாக திருப்பீடத்துக்கும்
இரஷ்யாவுக்குமிடையே காணப்படும் நல்லுறவுகள் பற்றி விவரித்தார்.
மேலும், பேராயர்
மெனினி பேசுகையில், சர்வதேச அளவில் அறநெறி விழுமியங்களைக் காப்பது, அமைதிக்காக உழைப்பது
போன்ற இவற்றில் இவ்விரு நாடுகளும் சேர்ந்து உழைப்பதன் முக்கியத்துவம் குறித்துக் குறிப்பிட்டார்.