2010-07-24 14:52:26

ஜூலை 25, நாளும் ஒரு நல்லெண்ணம்


"இறைவனை அடைவதற்கு நான் என்ன முயற்சிகள் செய்ய வேண்டும்?" என்று சீடன் குருவிடம் கேட்டான்.
"சூரியன் உதிப்பதற்கு நீ என்ன முயற்சிகள் செய்ய வேண்டும்?" என்று குரு மறு கேள்வி கேட்டார்.
எரிச்சலடைந்த சீடன், "பின் எதற்கு இத்தனை செபப் பயிற்சிகளை எல்லாம் கற்றுத் தருகிறீர்கள்?" என்று சூடாகக் கேட்டான்.
"சூரிய உதயத்தின் போது, நீ விழித்திருக்கவே இந்த பயிற்சிகள் எல்லாம்." என்று அமைதியாய்ப் பதில் சொன்னார் குரு.
 (Fr.Brian Cavanaugh என்பவர் எழுதிய "The Sower's Seeds" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டக் கதை.)







All the contents on this site are copyrighted ©.