2010-07-23 16:21:23

பிலிப்பைன்சில் தற்போதைய எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட அவர்களின் உண்மையான எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக இருக்கும்


ஜூலை23,2010 பிலிப்பைன்சில் தற்போது வெளியிடப்பட்டுள்ள எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட அவர்களின் உண்மையான எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என்று கமிலியன் சபை அருட்சகோதரர் Rodolfo Cancino கூறினார்.

எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் வேலைசெய்யும் கத்தோலிக்கருக்கென அடுத்த மாதத்தில் மனிலாவில் கூட்டம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு கருத்து தெரிவித்த அருட்சகோதரர் Cancino, பல எய்ட்ஸ் நோயாளிகள தங்கள் பெயர்களை அரசு அலுவலகங்களில் பதிவு செய்யவில்லை என்றுரைத்தார்.

பிலிப்பைன்ஸ் அரசு கடந்த மே மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி 1984ம் ஆண்டிலிருந்து இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 5124 ஆகும். இவ்வாண்டில் மட்டும் 700 பேர் புதிதாக இந்நோயால் தாக்கப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.