2010-07-23 16:22:25

இலங்கை கிரிக்கெட் வீரர் தான் பெற்ற கத்தோலிக்க கல்விக்கு நன்றி தெரிவித்துள்ளார்


ஜூலை23,2010 கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்கிற புதிய உலக சாதனையைப் படைத்திருக்கின்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தான் பெற்ற கத்தோலிக்க கல்விக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நேர்த்தியான அருள்தந்தையர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களால் தான் ஆசீர்வதிக்கப்பட்டிருந்ததாகக் கூறினார் முரளிதரன்.

கண்டி புனித அந்தோணியார் கல்லூரியில் படிப்பு, கிரிக்கெட் விளையாட்டு ஆகிய இவையிரண்டும் கிரிக்கெட்டில் தனது எதிர்காலத்தில் சாதனைகள் புரிய உதவின என்றும் முரளிதரன் கூறினார்.

மேலும், தரமான கல்வி, விளையாட்டு, அறநெறியில் வளர்ச்சி ஆகியவற்றைக் வழங்குவதில் கிறிஸ்தவப் பள்ளிகள் முன்னணியில் நிற்கின்றன என்று முரளிதரன் தந்தை சின்னத்தம்பி முத்தையா தெரிவித்தார்.

38 வயதான முரளிதரன் இந்துத் தமிழராவார். இவ்வியாழனன்று காலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் இவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.