முத்திபேறு பெற்ற அன்னை தெரசாவின் புனிதப் பொருட்கள் அமேரிக்கா, கனடா
ஆகிய நாடுகளில் பவனியாகக் கொண்டு செல்லப்படுகின்றன
ஜூலை 22, 2010 வருகிற ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படவிருக்கும் முத்திபேறு பெற்ற அன்னை தெரசாவின்
நூறாவது பிறந்தநாளையொட்டி, அவரது புனிதப் பொருட்கள் அமேரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் பவனியாகக்
கொண்டு செல்லப்படுகின்றன. அன்னை தெரசா பயன்படுத்திய செபமாலையும், அவர் அணிந்திருந்த
காலணிகளும் அமேரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் பல பெரு நகரங்களில் மக்களின் வணக்கத்திற்காக
வைக்கப்பட்டு வருகின்றன.அண்மையில் இப்புனிதப் பொருட்கள் புனித பவுல்-மின்னியாபோலிஸ் (Minneapolis)
உயர்மறைமாவட்டத்தின் பேராலயத்தில் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தன என்று
அவ்வுயர் மறைமாவட்ட செய்தி ஒன்று கூறுகிறது.