திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக மலர்கொத்து
ஒன்று வத்திக்கானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
ஜூலை21,2010 திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக
மலர்கொத்து ஒன்று வத்திக்கானுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டதென அமெரிக்க ஐக்கிய
நாட்டின் திருப்பீடத் தூதுவர் கூறினார். தொடர்பு சாதனங்கள் திருத்தந்தை மீது தவறான
பல தகவல்களை வெளியிட்டுவந்த வேளை, அவருக்குத் தங்கள் ஆதரவைக் காட்டும் வண்ணம் இவ்வாண்டு
புனித வாரத்தில் இந்த முயற்சி ஆரம்பமானதென்று, நியூ யார்க் உயர்மறைமாவட்ட பேராயர் Timothy
Nolan கூறினார்.புனித வாரம் முதல் தூய ஆவிப் பெருவிழாவரையில் சேகரிக்கப்பட்ட இந்த ஆன்மீக
மலர்கொத்தில் 24,714 திருப்பலிகளும், 31,847 உண்ணா நோன்பு முயற்சிகளும், 44,357 நற்கருணை
வழிபாடுகளும் அடங்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.