2010-07-20 15:53:08

சிகிச்சை பெறும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சமாக உயர்ந்துள்ளது


ஜூலை20,2010. HIV நோய்க் கிருமிகளுக்கானச் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சமாக உயர்ந்துள்ள போதிலும், தற்போதைய உலகளாவியப் பொருளாதார நெருக்கடியினால் நன்கொடை வழங்கும் நாடுகளின் இதற்கான முயற்சிகள் மந்தமடைந்துள்ளன என்று ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.

எய்ட்ஸ் நோய்க்கானச் சிகிச்சைகள் திட்டமிடப்பட்டபடி இடம் பெற்றால் 2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் இதனால் ஏற்படும் இறப்புகளை இருபது விழுக்காடாகக் குறைக்க முடியும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

மேலும், எய்ட்ஸ் நோயாளிகள் தங்கள் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல 50 சதவீத பேருந்து கட்டண சலுகையை ஆந்திர அரசு அறிவித்துள்ளது

இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் இளைஞர் மத்தியில் HIV நோய்க் கிருமிகள் அதிகமாகப் பரவி வருகின்றன என்றும் ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.