தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருநாள்
போராட்டம்
ஜூலை17,2010 இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லீம்கள் சம உரிமை பெற
வேண்டும் என்பதை வலியுறுத்தி இம்மாதம் 21ம் தேதி புதுடெல்லியில் ஒருநாள் போராட்டம் நடத்துவதற்குத்
தீர்மானித்துள்ளது இந்திய தேசிய தலித் கிறிஸ்தவர்கள் அவை.
இந்திய ஆயர் பேரவையின்
ஒத்துழைப்புடன் நடத்தப்படவுள்ள இப்போராட்டம், புதுடெல்லி, Jantar Mantar ல் காலை 9 மணி
முதல் மாலை 6 மணி வரை இடம் பெறும்.