2010-07-16 15:53:49

ராஜ்காட் சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அருள்தந்தை ஜோஸ் சிட்டோபரம்பில்


ஜூலை16,2010 இந்தியாவின் ராஜ்காட் சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்தந்தை ஜோஸ் சிட்டோபரம்பில்லை(José Chittooparambil) நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ராஜ்காட் சீரோ மலபார் மறைமாவட்டத்தின் ஆயராக, இந்நாள்வரை பணியாற்றிய ஆயர் கிரகரி கரோட்டெம்பிரல்லின்(Gregory Karotemprel)பணி ஓய்வை ஏற்றுக் கொண்ட திருத்தந்தை, அம்மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயரையும் இவ்வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார்.

புதிய ஆயர் சிட்டோபரம்பில், கேரளாவின் எர்ணாகுளத்துக்கு அருகிலுள்ள நீல்ஸ்வரம் என்ற ஊரில் 1954ம் ஆண்டு பிறந்தவர். 1985ல் C.M.I. சபையில் குருவான இவர், கேரளாவின் “Mahama Gandhi” பல்கலைகழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.

2008ம் ஆண்டில் C.M.I. சபையின் ராஜ்காட் மாநில அதிபராகப் பணியைத் தொடங்கினார்.

ராஜ்காட் சீரோ மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர், ஓய்வுபெறும் ஆயர் ஆகிய இருவரும் C.M.I. என்ற கேரளாவின் அமலமரியின் கார்மேல் சபையைச் சேர்ந்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.