ஜாம்ஷெட்பூர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் ராட்ரிக்ஸ் காலமானார்
ஜூலை 15, 2010 ஜாம்ஷெட்பூர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் ராட்ரிக்ஸ் மும்பையில் இப்புதனன்று
தன் 83வது வயதில் காலமானார். 1927ம் ஆண்டு பிறந்த ஆயர் ராட்ரிக்ஸ், இயேசு சபையில்
சேர்ந்து, தனது 31வது வயதில் குருவாகவும், 1971ம் ஆண்டு தனது 44வது வயதில் ஜாம்ஷெட்பூர்
மறைமாவட்டத்தின் ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார். மறைமாவட்ட ஆயராக 25 ஆண்டுகள் பணி
புரிந்து, 1996ம் ஆண்டு ஓய்வுபெற்றார். ஆயரின் அடக்கச் சடங்குகள் ஜூலை 20 வருகிற செவ்வாய்
அன்று காலை 10 மணிக்கு, ஜாம்ஷெட்பூர் பேராலயத்தில் நடைபெறும் என்று செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.