2010-07-14 16:43:36

இலங்கையின் வடபகுதி கத்தோலிக்கப் பங்குகளில் மழலையர் பள்ளிகள் அமைக்க முடிவு


ஜூலை 14, 2010. உள்நாட்டுப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வடபகுதியில் குழந்தைகளுக்குத் தேவையான மழலையர் பள்ளி (Kindergarten) வசதிகளை உருவாக்குவதில் குருக்கள், அருள் சகோதரிகள், சமூகப் பணி ஆர்வலர்கள் பலரும் இணைந்துள்ளனர்.

குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கான வழி முறைகளும், கல்வி உதவிகளும் வட பகுதி குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்று கொழும்பு உயர் மறைமாவட்ட நீதி மற்றும் மனித உரிமைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருள் தந்தை டெரன்ஸ் பெர்னாண்டோ கூறினார்.

கொழும்பு உயர்மறைமாவட்டத்தைச் சார்ந்த ஒவ்வொரு பங்கும் ஐந்து மழலைப் பள்ளிகளை நடத்த முடிவு செய்துள்ளதாக செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.