2010-07-14 16:41:45

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்களுக்கான அப்போஸ்தலிக்க மேற்பார்வையாளரை நியமித்துள்ளார் திருத்தந்தை


ஜூலை 14, 2010. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்களுக்கான அப்போஸ்தலிக்க மேய்ப்புப் பணி பிரதிநிதியாகவும், கனடா, ஐரோப்பாவில் வாழும் இந்த ரீதி விசுவாசிகளுக்கான அப்போஸ்தலிக்க மேற்பார்வையாளராகவும் குரு தாமஸ் நைகம்பரம்பிலை நியமித்து, அவரை ஆயராகவும் அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்தின் மைலப்புரா எனுமிடத்தில் 1961ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் நைகம்பரம்பில், 1986ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கத் திருச்சபையில் பல்வேறு முக்கியப் பொறுப்புக்களை வகுத்துள்ளார்.

புதிய ஆயர் நைகம்பரம்பிலுக்கு எந்த ஒரு மறைமாவட்டமும் ஒதுக்கப்படாமல், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், கனடாவிலும், ஐரோப்பாவிலும் வாழும் சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்களுக்கான பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.