2010-07-14 16:54:13

Leonardo da Vinciன் புகழ்பெற்ற ஓவியம் இங்கிலாந்தின் அரசுக் கலைக்கூடத்தில் மீண்டும் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது


ஜூலை 14, 2010. Leonardo da Vinci என்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர் தீட்டிய ஓவியம் ஒன்று இப்புதன் மாலை இங்கிலாந்தின் அரசுக் கலைக்கூடத்தில் மீண்டும் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Virgin of the Rocks அதாவது, பாறைகளின் கன்னி என்று தலைப்பிடப்பட்ட இந்த ஓவியம் கடந்த 18 மாதங்களாக மறு சீரமைப்பு செய்வதற்காக கலைக்கூடத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.

கன்னி மரியாவுடன் இருக்கும் குழந்தை இயேசுவை, குழந்தை வடிவத்தில் இருக்கும் திருமுழுக்கு யோவான் கண்டு வணங்குவதாக அமைந்திருக்கும் இந்த ஓவியம், 1483ல் Leonardo da Vinciயால் தீட்டப்பட்டது என்றும், 1880ம் ஆண்டு இந்த ஓவியம் இங்கிலாந்தின் அரசுக் கலைக்கூடத்தால் வாங்கப்பட்டதென்றும் செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.