2010-07-13 16:04:39

ஒரே பாலினத் திருமணங்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை நடத்தினர் அர்ஜன்டீனா குடிமக்கள்


ஜூலை 13, 2010 ஒரே பாலினத் திருமணங்களை அனுமதிக்க அர்ஜன்டீனிய சட்ட மன்ற உறுப்பினர்கள் சிந்தித்து வரும் வேளையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் அவை முன் போராட்டம் ஒன்றை நடத்தினர் அந்நாட்டு குடிமக்கள்.

அர்ஜன்டீனிய தலத்திருச்சபையின் முழு ஆதரவுடன் பல்வேறு இயக்கங்கள் கலந்துகொண்ட இப்போராட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையுடன், பல தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புகளும் பங்குபெற்றிருந்தன.

ஒரே பாலின திருமணங்களுக்கு எதிராக இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அர்ஜன்டீனிய மக்கள், "எங்கள் குழந்தைகளுக்கு தாயும் வேண்டும் தந்தையும் வேண்டும்" என்ற வாசகங்களைக் கொண்ட அட்டைகளைத் தாங்கிச்சென்றனர்.








All the contents on this site are copyrighted ©.